×

ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. திகார் சிறைக்கு சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்து செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் 9-ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

The post ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Delhi Special Court ,Jaber Sadiq ,Delhi ,Tigar ,
× RELATED ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம்...